Thursday, December 2, 2010

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு

2.1 முன்னுரை

* இலக்கியங்களுள் தலை சிறந்தது சங்க இலக்கியம்

* தோன்றிய காலம் சங்க காலம்

* இத்தொகுப்பில் உள்ள பாட்டுகள் கி.மு.500 முதல் கி.பி.100 வரை

* தொல்காப்பியம் இக்காலத்தைத் சார்ந்தது.

* வாய்மொழி இலக்கியமே மக்களுக்கு வழங்கிய பிறகு புலவர்கள் சிலர் எழுத்து வடிவம் தந்தனர்.

2.2 சங்கம் என்ற பெயர்

* அறிஞர், அறவோர் பலர்கூடி அமைக்கும் அமைப்பு.

* பிற்காலத்தில் சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ் நாட்டில் சங்கம் ஏற்படுத்திக் கல்வி தொண்டும் சமயத்தொண்டும் புரிந்தனர்.

* பழந்தமிழ் நாட்டில் மூன்று தமிழ்ச்சங்கங்கள் இருந்தன. மதுரையில் கடாரப்புறத்தில் முதல் இரñடு சங்கமும் மறந்தபிறகு மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் பாண்டியர்கள் ஆதரவோடு நடந்தது எனக் கருதப்படுகின்றது.

* மூன்றாம் தமிழ்ச்சங்கத்து நூல்களே எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் என்று கருதி, அவற்றைî சங்க இலக்கியம் எனக் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

* சங்க காலத்தில் இயற்றிய 2380 பாடல்கள் இரு தொகுதிகளாக கி.பி.3,4ஆம் நூற்றாண்டில் தொகுப்பப்பட்டன. அவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.

* சங்கப் பாடல்கள் அகப்பாடல், புறப்பாடல் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

* அகப்பாடல் - ஒத்த தலைமகனும் தலைமகளும் உள்ளம் ஒன்று கூடி வாழும் வாழ்க்கைக் கூறும் பாடலாகும்.

* அகப்பாடல் திணைகள் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

* மேலும் கைகிளை, பொருந்திணை ஆகிய 2 திணைகளும் பொருந்தாக் காலமாகக் கொண்டு அமையப் பெற்றிருக்கும்.

* புறப்படல் - போர்கொடை, வெற்றிச்சிறப்பு கூறும் பாடலாகும்.

* புறப்படல் திணைகள் - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை.

* மேலும் பாடாண், காஞ்சி ஆகிய திணைகள் ஒழுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

* சங்க இலக்கியங்களில் சிறப்புகள்

Ø பகுத்தறிவகுக்குப் புறம்பான கற்பனையினைக் காண இÂÄ¡Ð

Ø உள்ளதை உள்ளவாறு கூறுதல்

Ø இயற்கையின் பின்ன½¢யில் அமைந்தவை

Ø சங்கக் காலத்துப் புலவர்கள் ஓரினத்தவர் அல்லர்; ஓரிடத்தவர் அல்லர்; காலத்தவரும் அல்லர்.

Ø சங்கì காÄத்தில் ஒளவையார், காக்கைப் பாடினியார் முதலிய பெண்புலவர்கள் சிறந்த கவிதைகள் இயற்றியிருப்பது அக்கால கல்வியின் முயற்சியினையும் பெண்ணின் பெருமையையும் காட்டுகின்றன.

Ø பாவலரன்றி மன்னர்களும் கவிதை இயற்றினர்.

Ø தமிழர்களின் வாழ்க்கை முறையினைச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

Ø நசுதிக் கருத்துகள் பரவிக் கிடக்கின்றன.

Ø கற்பனை வளம் மிகுந்தவை.

2.3 அகம்

v காதலோடு, அதனோடு தொடர்புடைய உணர்வுகளும் நுட்பமும் ஆழமும் நிறந்தவை.

2.3.1 களவொழுக்கம்

* தலைவன் ஒருவன் பூப்பொழில் ஒன்றில் தனித்துப் பூக்கொய்யும் நங்கை ஒருத்தியைக் காண்கிறான்.

* இருவரும் நோக்கி இருவர் விழிகளும் சந்திக்கின்றன; மாறி இதயம் புகுக்கின்றனர்.

* அச்சமயம் உள்ளத்தில் தோன்றும் இன்ப உ½ர்ச்சியே அவர்தம் பிற்காலத்தில் காதல் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது.

* பார்வை ஒன்றே, உள்ளம் ஒன்றே, உணர்ச்சியும் ஒன்றே அவ்விருவரும் ஓருயீர் ஈருடல் ஆகின்றனர்.

2.3.2 இîசெறித்தல்

* களவு வாழ்க்கையில் தலைவி தலைவனை அடிக்கடி சந்திக்க முடியாமை.

* தலைவன் பொருள் ஈட்ட அயலூர் சென்றான், தலைவனைக் காண முடியாமல் தவிக்கின்றாள்.

* ஆகவே, வீட்டினுள் அகப்பட்டு கிடந்தாள். வீட்டுக் காவலே இச்செறித்தல் எனப்படும்.

2.3.3 கழங்கு பார்த்தல்

* தலைவி கவலையால் உடல் மெலிந்து போவதைக் கண்டு செவிலித்தாயும் நற்றாயும் கவலைì கொண்டு வேலனை அழைத்து யோசனை கேட்பர்.

* வேலன் கோலால் கழற்சிக்காய்களை வாரியெடுக்கும் போது தம் உள்Çத்தில் பட்டதைக் குறியாகக் கூறுவான்.

2.3.4 கட்டுக் கேட்டல்

* குறி சொல்பவனை வீட்டில் அ¨Æத்து, முறத்தில் பிடிநெல்லையிட்டு எதிரில் தலைமகனை நிறுத்துவர். தெய்வத்திற்கு வழிபாடு செய்யப்படும்.

* அப்பிடிநெல்லை நான்காகப் பிரித்து எண்ணி எஞ்சியவை ஒன்று, இரண்டு, மூன்று அளவும் முகனால் நேர்ந்த கு¨È எனவும் நான்காயின் வேறொரு நோய் எனவும் கூறுவாள்.

* இது ஒருவகை குறியாகும்.

2.3.5 அறத்தோடு நிற்றல்

* களவு புணர்ச்சியால் தாö தோழியை வினவ, தோழி களவை வெளிப்படாமல் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

1. தலைவி சுனையில் நீராடுகையில் கால் இடறிச் சுனையில் விழுந்தாள். அவமயம் கட்டழகுள்ள இளைஞன் அங்குத் தோன்றி விரைவாக நீரில் குதித்து தலைவியை இணைத்துக் கொண்டு வெளியேறினான். தன் உயிரைக் காத்த அத்தலைவன் பால் தலைவி உள்ளம் நெகிழ்ந்தாள்.

2. தலைவியும் நாங்களும் பூப்பறிக்கும் போதுதலைவி விரும்பிய பூவைப் எங்களால் பறிக்க இயலவில்லை. தலைவி வாட்டமுற்றாள். அங்குத்தோன்றிய இளைஞன் அம்மலரைப் பறித்துத் தலைவியின் கையில் கொடுத்தான். தலைவி அவன்பால் நன்றியறிதல் உடையவள் ஆனாள்.

3. நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு காட்டானை மதங்கொண்டு எங்களை நோக்கி ஓடி வந்தது. தலைவி அலறினாள். அவளது மையுண்ட கñகளில் நீர் அருவி போல பெருகியது. அச்சமயõ கையில் வேலேந்திய இளைஞன் தோன்றினான். அச்சத்தால் அலறிய தலைவியைத் தன் இடது கையால் அணைத்துக் கொண்டு, வலது கையில் தாங்கிய வேலால் யானையைக் குத்தினான். யானை ஓடியது. தன் உயிரைக் காத்த அத்தலைவன் பால் தலைவியின் உள்ளம் ஈடுபட்டது.

2.3.6 மடலேறுதல்

* தோழி காதலியின் காதலனைச் சந்திக்க உதவாவிடிலும், தலைவியின் பெற்றோர் மணம் மறுப்பினும் தலைவன் மடலேறத் துணிவான்.

* அவன் பனை மடலால் குதிரையைப்போல ஒர் உருவத்தையமைத்து அதில் கழுத்தில் மணி, மாலை முதலியவற்றைப் பூட்டுவான். தலைவின் உருவப்படத்தை ஒரு கையில் ஏந்திக் கொண்டு யாவரும் அறிய மடலூர்ந்து வருவான்.

* ஊர் மக்கள் பலவாராகப் பேச தலைவியின் பெற்றோர் மணத்திற்கு இசைவர்.

2.3.7 உடன் போக்கு

* காதல் கொண்ட தலைவனுக்கு தன் பெற்றோர் தராததை அறிந்து, த¨Äவி தலைவனுடன் ஓடுதல் உண்டு. இதனை உடன் போக்கு என்பர்.

* அவன் அவளை வீடு கொண்டு சென்று மணம் முடிப்பது உண்டு; போகும் வழியில் தலைவியைச் சார்ந்தவர் வழி மறித்துக் கொண்டு சென்று தலைவியின் வீட்டில் மணம் முடித்தலும் உண்டு.

* இவ்வுடன் போக்கிலிருந்து கற்புத் தொடங்கி விடுகிறது. இதன் பின்பு நிகழ்வனவெல்லாம் கற்பியற் செயல்கள் எனப்படும்.

* கற்பு என்பது ஒருவன் ஒருத்தியோடு உள்ளம் ஒன்றி வாழ்க்கை நடத்துதல் ஆகும்.

2.3.8 கற்பு வாழ்க்கை

* உடன்போக்கு சென்ற பிறகு, அதுவரையிலும் தலைவி தன் காலின் அணிந்திருந்த சிலம்பு தலைவன் வீட்டில் நீக்கப்பெறும்.

* கற்பு வாழ்க்கைக்குறிய புதிய சிலம்பு அணிய பெறும்.

2.3.9 பரத்தையிற் பிரிவு

* தலைவன் பரத்தையர் இன்பத்தை நாடிப்பிரிவதை தோழியும் தலைவியும் கண்டிப்பர்.

* தலைவன் பாணனைத் தூது விடுத்துத் தலைவியை அமைதிப் படுத்துவான். சில சமயங்களில் தலைவி வாயில் மறுப்பாள்.

* தலைவன் தன் புதல்வனைத் தழுவிக் கொண்டு கொஞ்சிக் குலாவி வீட்டினுள் நுழைந்து படுக்கையில் படுப்பான். தலைவி அவனது குறையை மறந்து ஊடல் தணிவாள்.

* தலைவன் இங்க½ம் தலைவியின் மனம்வருந்தும்படிப் பல தீமைகள் செய்யினும் அவள் பொறுத்து அவனை ஏற்றுக் கொள்வாள்.

2.4 புறம்

2.4.1 போர்முறைகள்

* பண்டைத் தலைவர்கள் போரில் அறநெறியைக் கையாண்டவர்கள். ஒரு நாட்டைக் கையாள அரசன் முதலில் பசுக்களைக் கவர்வான். இம்முயற்சி வெட்சித்திணை எனப்படும்.

* இம்முயற்சியின் போது பகை வேரர் வெட்சி வீரரின் முயற்சியைத் தடுப்பர். தடுக்கும் முயற்சி கரந்தைத் திணை எனப்படும்.

* நாட்டின் மீது எடுக்கப்படுன் படையெடுப்பு வஞ்சித்திணை எனப்படும்.

* அப்படையெடுப்பை எதிர்த்து நிற்றல் காஞ்சித்திணை எனப்படும்.

* கோட்டையை முற்றுகையிடல் உழிஞைத்திணை எனப்படும்.

* கோட்டையுள் இருந்து எதிர்த்தல் நொச்சித்திணை எனப்படும்.

* கோட்டைக்கப்பால் வெட்ட வெளியில் நடைபெறும் கடும்போர் தும்பைத்திணை எனப்படும்.

* போரில் வெüறி பெÚதல் வாகைத்திணை எனப்படும்.

* மேலே கூறப்பட திணைப்போரும் பலபடிகள் உடையது. அப்படிகள் துறைகள் எனப்படும்.

2.4.2 திணை

* காஞ்சித்திணை

* பாடான்திணை

2.5 சங்க மறுவிய காலம் (நீதி நூல் காலம்)

* இருண்ட பகுதி என்பர்.

* நீதி நூல்கள் அதிகமாகத் தோன்றின.

2.5.1 திருக்குறள்

* முதல் அடி நான்கும் சீரும், இரண்டாவது அடி மூன்ரும் சீரும் உடையதாய் வரும் இரண்டுஅடி வெண்பாவுக்குக் குறள்வெண்பா என்று பெயர்.

அ) பாகுபாடு

* அறம், பொருள், இன்பம், வீடு என 4 பொருள்களுள் முதல் மூன்றையும் பற்றி 1330 குறட்பாக்களால் விளக்குகிறது.

* பத்து பத்துகளாகப் பகுத்து, ஒவ்வொருபத்தியிலும் ஒவ்வொரு பண்பையோ கொள்கையையோ விளக்குகிறார்.

* அரசியல் பற்றியும் அமைச்சர் பற்றியும் குடிமக்களின் பண்புகள் பற்றியும் இரண்டாம் பகுதியில் 700 குறளில் 70 அதிகாரங்களில் விளக்கியுள்ளார்.

* மூன்றாம் பகுதியில் உயர்ந்த காதலரின் காதலைப்பற்றிய கற்பனை 250 குறளில் 25 அதிகாரங்களில் விளக்கப்பட்டுள்ளன.

ஆ) பொதுமை

* எல்லாசமயமும் எல்லர்க்கும் பொதுவான நூலாகப் போற்றக்கூடியது.

* எவ்வகை சார்பையும் கடந்து, மனித உள்ளத்தின் இயல்பைத் துருவி ஆரய்ந்து உண்மையை மட்டும் தெளிவாக எடுத்துரைப்பது மற்றொரு சிறப்பாகும்.

இ) அறத்தின் உறுதி

* மறந்தும் பிறருக்குக் கெடுதி விளைவிக்கக் கூடாது.

ஈ) உலகியல் தெளிவு

* கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை போன்ற அதிகாரங்களில் 40 குரளில் அறிவு வலர்ச்சியின் சிறப்பைக் கூறுகின்றார்.

* கல்வியைப் பற்றி ‘கற்க வேண்டும்;கற்கத் தகுந்தவற்றை ஐயமறக் கற்றுத் தெளிய வேண்டும். கற்றபிறகு அதர்கேற்ப ஒழுக வேண்டும்’ என்கிறார்.

* நல்லவரின் வறுமையைவிடக் கல்லாதவர்களின் செல்வம் பொல்லாதது என்கிறார்.

* எது அறிவு என்றால் மனம் சென்ற இடத்தில் எல்லாம் செல்ல விடாமல் தீமையிலிருந்து நீக்கி நன்மையில் செலுத்தவல்லது அறிவு என்கிறார்.

* நீதி முறை செய்யாத அரனுடைய ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தால் வறுமையைவிடச் செல்வம் துன்பமானது ஆகும்

* இத்தகைய கருத்துகளை ஏற்றிருப்பதால் இதை காÄம் கடந்த பொதுமை நூல் என்று புகழப்படுகிறது.

2.5.2 நாலடியார்

* நான்கு அடிகள் கொண்ட வெண்பாவால் ஆனது.

* இச்செய்யுள்கள் பலரால் பாடப்பட்டது.

2.5.3 மற்ற நூல்கள்

* நான்மடிகள், சிறுபஞ்சமூலம், திரிகடுகம்,ஏலாதி என்பவை நூறு நூறு செய்யுள் கொண்ட நீதிநூல்கள்

* இனியவை 40, இன்னா 40 ஆகியவை நாற்பது நாற்பது செய்யுள் கொண்ட நீதிநூல்கள்.

* பழமொழி நானூறு என்பது நாலடியார்போல நானூறு செய்யுள் கொண்டது. ஒவ்வொரு செய்யுளின் இறுதியில் அது கூறும் நீதிகேற்ப பழமொழி ஒன்று உள்ளது.

* அக்காலத்தில் போர்றப்பட்டிருந்த ஒழுக்கவிதிகள் பலவற்றை ஆசாரக்கோவை எடுத்துரைகின்றது. முதுமொழிக்காஞ்சி திட்பமான சிறுசிறு தொடர்களில் நீதிகள் பலவற்றை உணர்த்துகிறது. இன்னிலை 45 செய்யுள்களால் நீதிகளை உணர்த்துகிறது.

* கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது,ஐந்திணை எழுபது கைந்நிலை போன்றவை காதல் பற்றிய பாட்டுகள் தழுவிய நூல்கள்.

* களவழி நாற்பது என்பது போர் பற்றியது. சேரனும் சோழனும் போர் புரிந்ததைக் குறிக்கும். அப்போரில் சேரன் தோல்வியுற்றதாகவும், அவன் சிறையில் வைக்கப்பட்டபோது அவனை மீட்பதற்காகப் பாடியதாகவும் கூறப்படுகிறது. இதன் நாற்பது வெண்பாக்களும் போர்க்களத்தைப் பற்றியும் சோழன் அரசன் பெற்ற வெற்றியயையும் எடுத்து¨Ãப்பதாக அமைந்துள்ளன.

2.6 காப்பியக் காலம்

முதலில் தோன்றிய காப்பியன் சிலப்பதிகாரம். பின்னர் மணிமேகலை. சிலப்பதிகாரத்தை ஏற்றியவர் இளங்கோவடிகள்.மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச்சாத்தனார்.

2.6.1 சிலப்பதிகாரம்

* சேர சோள பாண்டிய நாடுகளில் நடந்த காப்பியமாக ஒற்றுமையுடன் பார்க்கின்றார்.

* இதில் 3 காண்டங்கள் உள்ளன.

* புகார் காண்டம் - கோவலனும் கன்னகியும் கூடி வாழும் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்குக் கோவலன் செல்வத்தையெல்லாம் இழக்கக்கூடிய நிலையுள்லதைக் கானலாம்.

* மதுரைக் காண்டம் - கோவலன் கள்வன் என குற்றசஞ்சாட்டப்படுகின்ற நிலையைக் காணலாம்.

* வஞ்சிக் காண்டம் - மதுரையை எரித்து கண்ணகி தெய்வமாக நின்ற காட்சியைக் காணலாம்.

* தமிழினத்தின் ஒற்றுமையைக் காட்ட இளங்கோவடிகள் இக்காப்பியத்தை இயற்றினார்.

* சிலப்பதிகாரம் மூன்று உண்மைகள் உணர்த்துகின்றது

· அரசியல் பிழைத்தோரர்க்கு அறமே கூற்றாகும்

· உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதல்

· ஊழ்வினை உருத்த நந்து ஊட்டும்

* காப்பியம் பிறந்த கதை

· ன்ன்

2.6.2 மணிமேகலை

* சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். இதனால் இரட்டைக் காப்பியம் என்பர்.

* கோவலனுக்கும் நாட்டின் கலையரசியான் மாதவிக்கும் மகளாகப் பிறந்த மணிமேகலையின் வாழ்க்கையை சித்தரிக்கும் காப்பியம்.

No comments:

Post a Comment